Ads (728x90)





பூனை இறைச்சியை முயல் இறைச்சி என்று பொய் சொல்லி பல உணவகங்களுக்கு கொடுத்து அதிக பணம் சம்பாதித்த ஒரு நபரின் செயல் வெளிச்சத்திற்கு வந்து மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சீனாவின் செங்டூ மாகாணத்தில் உள்ள ஒரு இடத்தில் Huang Pingfu என்ற நபர் அதிக அளவில் பூனைகளை வளர்ப்பதாகவும், நாள்தோறும் 100 பூனைகளை கொல்வதாகவும் மிருக பாதுகாப்பு ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதனைதொடர்ந்து அங்கு சென்று பார்த்த மிருக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம் அங்கு பல பூனைகள் கூண்டுகளில் உயிருடனும், அதன் அருகில் பல பூனைகள் தோல் உரிக்கப்பட்டு இறந்த நிலையிலும் கிடந்தன.




இதுகுறித்து Huang யிடம் பூனையை முயல் என்று பொய் சொல்லி விற்பது தவறில்லையா என அதிகாரிகள் கேட்டதற்கு அவர் பயப்படாமல் பதிலளித்தார்.
நான் கடந்து 20 வருடங்களாக பூனைகளை உணவகத்துக்கு விற்று வருகிறேன் என கூறினார்.
இது பற்றி பேசிய மிருக பாதுகாப்பு ஆணைய தலைவர் , இப்படி பூனைகளை கொன்று உணவகத்திற்கு தருவதன் மூலம் Huang, தினம் 3,000 yuan அளவு சம்பாதித்து வருகிறார்.
இங்கிருந்த 49 பூனைகளை உயிருடன் மீட்டு நாங்கள் விலங்குகள் சரணாலயத்தில் ஒப்படைத்துள்ளோம் என்று கூறினார்.
மேலும், சீனாவில் பூனைகளை கொன்று உணவகத்துக்கு விற்பனை செய்ய சட்டப்படி தடை எதுவும் இல்லை என்பதால் Huang Pingfu மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பார்களா என்பது சந்தேகம் தான்.


Post a Comment