இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் Charlotte Harding (30) என்ற பெண் தன் இரு குழந்தைகளான Ethan(4) மற்றும் Harrison(2) ஆகியோரை அழைத்து கொண்டு கார்டிப் நகரில் அமைந்துள்ள புகழ் பெற்ற National History மியூசியத்துக்கு போனார்.
அங்கு பல இடங்களை புகைப்படம் எடுத்த Charlotte பின்னர் குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்து தான் எடுத்த புகைப்படங்களை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்.
காரணம் அவர் எடுத்த ஒரு புகைப்படத்தில் தன் குழந்தை விளையாடுவது போலவும், அருகில் உள்ள முட்புதரில் இரண்டு ராணுவ வீரர்கள் நீல நிற ஆடை அணிந்து நிற்பது போலவும் ஒரு மங்கலான உருவம் அவருக்கு தெரிந்துள்ளது.
இது குறித்து பேசிய Charlotte, நான் எடுத்த புகைப்படத்தில் இரண்டு போர் வீரர்களின் பேய் போன்ற உருவம் தெரிந்தது. அதை பார்த்ததிலிருந்து நான் தூங்க முடியாமல் பயத்தில் தவிக்கிறேன் என கூறினார்.
மேலும், அந்த புகைப்படம் எடுத்த இடத்தில் 1648 ஆண்டு காலகட்டத்தில் போர் நடந்துள்ளது என்வும் அதில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்துள்ளார்கள். எனவே இந்த புகைப்படத்தில் இருப்பது அவர்களுடைய ஆவியாக இருக்குமோ என தான் நினைப்பதாக Charlotte கூறியுள்ளார்.
இந்தநிலையில் இதிலெல்லாம் நம்பிக்கையில்லாத Charlotte கணவர், இந்த புகைப்படத்தில் தெரிவது வெறும் பூக்கள் மட்டுமே, Charlotte பயத்தால் அதை பேய் என கூறுவதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment